பூமிபுத்ராகளை மடானி அரசு கைவிட்டு விட்டது! முகைதீன் குற்றச்சாட்டு!

- Sangeetha K Loganathan
- 13 Feb, 2025
பிப்ரவரி 13,
பூமிபுத்ராகளின் பொருளாதாரம் சரிந்து வருவதாகவும் அரசாங்கம் பூமிபுத்ராகளைக் கைவிட்டு விட்டதாகவும் பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். கடந்த 2023 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி பூமிபுத்ரா தொழிலாளர்களின் சராசரி சம்பளம் சீனர்களை விடவும் RM1,873 ரிங்கிட் குறைவாக இருப்பதாகவும் இந்திய தொழிலாளர்களை விடவும் RM437 ரிங்கிட் குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
கடந்த 2 ஆண்டுகளில் பூமித்ராகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசாங்கம் எந்தமாதிரியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததால் வரும் ஆண்டுகளில் இது மேலும் சரிவை மேற்கொள்ளும் என Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார். பூமிபுத்ராக்களின் சலுகைகள் உயர்மட்டத்தில் மட்டுமே இருப்பதால் தொழிலாளர்களுக்கானச் சலுகைகள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை என்றும் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
Tan Sri Muhyiddin Yassin mendakwa ekonomi Bumiputera semakin merosot dengan gaji lebih rendah berbanding kaum lain. Beliau menegaskan kerajaan tidak bersungguh-sungguh dalam memperkasakan agenda Bumiputera meskipun jurang ekonomi semakin melebar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *