மலாக்காவில் காட்டுத் தீ! 12 மணிநேரம் போராடிய தீயணைப்பு அதிகாரிகள்!

top-news

பிப்ரவரி 14,

மலாக்கா ஆயேர் கெரோ பகுதியில் உள்ள காட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் 12 மணிநேரங்கள் போராடியதாக மலாக்கா மாநிலத் தீயணைப்புத் துறையின் இயக்குநர் Mohd Khairul nizam Anuar தெரிவித்தார். மலாக்காவின் Taman Muzaffar Height காட்டில் ஏற்பட்ட தீயில் சுமார் 6.8 ஹெக்டர் பரப்பளவு முழுவதும் எரிந்து நாசமானதாக அவர் தெரிவித்தார்.

காடுகளில் தீ வேகமாகப் பரவியதால் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடியதாகவும், காட்டுத் தீ பரவியதும் முதற்கட்டமாக 29 தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணிவரைக்கும் போராடி தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக மலாக்கா மாநிலத் தீயணைப்புத் துறையின் இயக்குநர் Mohd Khairul nizam Anuar தெரிவித்தார்.

Kebakaran hutan seluas 6.8 hektar di Taman Muzaffar Height, Melaka berjaya dikawal selepas 12 jam usaha pemadaman oleh pasukan bomba. Lebih 60 anggota bomba mengawal kebakaran yang merebak dengan pantas. Api berjaya dipadamkan sepenuhnya sekitar jam 5 pagi keesokan harinya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *