கொத்து கொத்தாக மாட்டிய அந்நிய நாட்டினர் நள்ளிரவு முழுக்க தொடர்ந்த அதிரடி வேட்டை! சிக்கிய 1435 பேர்

- Shan Siva
- 30 May, 2025
இரவு 10.45 மணிக்குத் தொடங்கி இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த ஒருங்கிணைந்த
நடவடிக்கையின் போது 1,435 நபர்கள்
பரிசோதிக்கப்பட்டதாக புக்கிட் அமானின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது
ஒழுங்குத் துறையின் பொது செயல்பாட்டுப் படையின் துணை இயக்குநர் டத்தோ முகமது
சுஸ்ரின் முகமது ரோதி தெரிவித்தார்.
அதிகபட்சமாக 1,222 பேர் மியன்மார் நாட்டினர் இருந்ததாக அவர் கூறினார். இதில் 160 குழந்தைகள் அடங்குவர். மீதமுள்ளவர்கள் இந்தியா,
நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த குடிமக்கள்
என்று அவர் நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அவர்களில்
பெரும்பாலோர் செலாயாங் மொத்த விற்பனை சந்தை மற்றும் அருகிலுள்ள வணிகங்களில்
பணியாற்றும் தொழிலாளர்கள் என்று முகமது சுஸ்ரின் தெரிவித்தார்.
நீண்ட காலம்
தங்கியிருத்தல், செல்லுபடியாகும்
பயண ஆவணங்கள் இல்லாதது, மின்சார
மீட்டர்களை சேதப்படுத்துதல், சட்டவிரோத நீர்
இணைப்புகள் மற்றும் உரிமங்கள் இல்லாமல் வணிகங்களை நடத்துதல் போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டதாக
அவர் கூறினார்.
சோதனை
செய்யப்பட்ட தங்குமிடங்கள் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டு, ஏராளமான குடியிருப்பாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக் கிடைத்த பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்!
Seramai 1,435 individu diperiksa dalam serbuan ke atas 225 premis di Selayang Utara. Majoritinya warga Myanmar, termasuk 160 kanak-kanak. Mereka didapati melakukan pelbagai kesalahan imigresen dan perniagaan haram. Serbuan dibuat susulan aduan awam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *