புக்கிட் திங்கியில் வாகனம் கவிழ்ந்து மரத்தில் மோதியதில் ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், பிப் 9: கிள்ளான், புக்கிட் திங்கியில் வாகனம் கவிழ்ந்து மரத்தில் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார்.

ஷெல் பெட்ரோல் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 8 மணிக்குப்  இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனை அடுத்து  போர்ட் கிள்ளான் தீயணைப்பு நிலைய  மீட்புப் படையினர் அந்த நபரை ஓட்டுநர் இருக்கையில் இருந்து வெளியேற்றியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த இடத்திற்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *