இபிஎஃப் 5.8% லாப ஈவை வழங்குகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 10-

ஊழியர்கள் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) கடந்தாண்டுக்கான சேமிப்புக்கு 5.8 விழுக்காட்டுக்கும் அதிகமான லாப ஈவை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் அது அறிவித்த 5.5 விழுக்காட்டு லாப ஈவைவிட இது சற்று அதிகமாகும்.

ஷரியா சேமிப்புக்கு 5.4 விழுக்காடு முதல் 5.6 விழுக்காடு வரை லாப ஈவு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  ஈராண்டுகளுக்கு முன்பு ஷரியா கணக்குகளுக்கு 5.4 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டது.

இபிஎஃப் வாரியத்தால் இத்தடவை 5.8 விழுக்காட்டுக்கும் அதிகமான லாபாவை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லாபஈவு பற்றிய இறுதி அறிவிப்பு மார்ச் மாத முற்பகுதியில்தான் அறிவிக்கப்படும். கடந்த மூன்றாண்டுகளில் வழங்கப்பட்டதைவிட கூடுதலான லாபஈவு இத்தடவை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும், முந்தைய பத்து ஆண்டுகளில் சராசரியாக ஆறு விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

கடந்த 2023ஆம் ஆண்டில் 5,033 கோடி வெள்ளியை வழக்கமான சந்தாதாரர்களுக்கு லாபஈவாக இபிஎஃப் வழங்கியது. ஷரியா சேமிப்புகளுக்கு 748 கோடி வெள்ளியை அது வழங்கியது.இபிஎஃப் வாரியத்தில் மெரத்தம் ஒரு கோடியே அறுபது லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுள் 85 லட்சம் பேர் தொடர்ந்து சந்தா செலுத்தி வருகின்றனனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *