SPM தந்த உருக்கம்... வாய் பேச முடியாத பெற்றோரை, ஊர் பேச வைத்த மகன்!

top-news
FREE WEBSITE AD


ஒரு மாணவர்... அவரது பெற்றோர் இருவருக்கும் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது என்பதால், வார்த்தைகளை விட செயலே சத்தமாய் விரியும் ஓர் அமைதியான வீட்டுச் சூழலில் வாழ்வது என்பது முஹம்மது லோக்மான் எனும் அந்த மாணவருக்கு வழக்கமாகிவிட்டது.

அம்மா அப்பாவால் பேச முடியாவிட்டால் என்ன அவர்களை ஊர் பேச வேண்டும் எனும் வேட்கையில் தனக்கான இலக்கை நிர்ணயித்து தெளிவாய் பயணப்பட்டான் முஹமட் லோக்மான்.

வழக்கமான அம்மா- அப்பா  நச்சரிப்பதைப் போலல்லாமல், அவர்களின் அமைதியான உந்துதலே அவனின் இயக்க சக்தியாய் ஒவ்வொரு நாளும் ஊக்கமளித்தது.

எனது (பெற்றோரின்) குரலை நான் ஒருபோதும் கேட்கவில்லை என்றாலும், அவர்களின் குழந்தைகளின் கல்வி குறித்த அவர்களின் முதன்மையான அக்கறையை நான் அறிந்திருக்கிறேன்.

வாட்ஸ்அப் வருவதற்கு முன்பு, என் அப்பாவும் அம்மாவும் எங்களுக்கு ஒவ்வொரு அறிவுரைகளையும் எழுதுவார்கள், சில சமயங்களில் சைகை மொழியைப் பயன்படுத்துவார்கள், அங்கு நாங்கள் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்  என்று நெகிழ்ச்சியாகிறார் லோக்மான்.

நான்கு சகோதரர்களில் மூத்தவரான முஹம்மது லோக்மான், SPM இல் 9A மதிப்பெண்களைப் பெற்று தன் பெற்றோர்களைப் பெருமைப்படுத்தி அழகு பார்த்திருக்கிறான் லோக்மான்.

மேலும் MRSM Muar இல் அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ‘டோகோ அகாடமிக்’ ஆகவும் இருந்துள்ளான்.

கணிதத் துறையில் விரிவுரையாளராக ஆகவேண்டும் என்பதே தனது கனவு எனக் குறிப்பிடும் அவர், எப்போதும் தனது பெற்றோருக்கு மரியாதை செலுத்துவதும், நல்ல முடிவுகளைப் பெற எப்போதும் பிரார்த்தனை செய்வதுமே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார்.

ஆசிரியரிடம் பல கேள்விகளைக் கேட்பதன் மூலமும், வகுப்பில் முழுமையாக கவனம் செலுத்துவதன் மூலமும் விடாமுயற்சியுடன் செயல்படுவேன். அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் விளையாட்டை மறந்துவிடாமல் இருப்பேன். உண்மையில், வகுப்பில் கற்பிக்கப்படும் அனைத்திலும் எனது சக ஊழியர்களுடன் விவாதங்கள் மற்றும் வினாடி-வினா-பாணியில் கேள்வி-பதில்களை நடத்துவதே எனது பழக்கமாக இருந்தது என்று கூறும் லோக்மான் ரக்பியிலும் ஆர்வம் மிக்கவராம்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *