சைபர் ஜெயா மாணவி கொலை! மூவர் அதிரடி கைது!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

பெட்டாலிங் ஜெயா: சைபர்ஜெயாவில் உள்ள காண்டோமினியம் பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை 20 வயது பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களான ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என்று சிப்பாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன் தெரிவித்தார்.

ஜொகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள கெமெஞ்சே ஆகிய இடங்களில் நேற்று காலை 9 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மூன்று சந்தேக நபர்களும் கொலையுண்டவருக்குத் தெரிந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *