பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பில் மலேசியா – நியூசிலாந்து! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

வெலிங்டன், ஜூலை 17:  மலேசியாவும் நியூசிலாந்தும் தங்கள் பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பை மேம்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் பகிர்வு, கல்வி மற்றும் பேரிடர் பாதுகாப்புப் பயிற்சி, மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆயத்த நடைமுறைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தளவாட மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் அடிப்படை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

மலேசியாவும் நியூசிலாந்தும் நீண்ட காலமாக பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பேரிடர் மேலாண்மை இருதரப்பு ரீதியாக மேம்படுத்தப்படக்கூடிய ஒரு பகுதியாகவே உள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் மலேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) மற்றும் நியூசிலாந்தின் தேசிய அவசர மேலாண்மை நிறுவனம் இடையேயான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் நடந்து வருகிறது என அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் பிராந்திய தயார்நிலை மற்றும் பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று ஜாஹிட் நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *