ஒற்றுமை அரசு 2.0 அன்வாரை நீக்கிவிட்டு ஜொஹாரி பிரதமரா? தடதடக்கும் அரசியல்!

- Shan Siva
- 17 Jul, 2025
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு பதிலாக தாம் பிரதமராகப் பதவியேற்பது குறித்துப்
பேசப்படுவதாக கூறப்படும் கூற்றுக்களை டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி
மறுத்துள்ளார்.
அம்னோ உதவித்
தலைவரும், தித்திவாங்சா
நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், ஒற்றுமை
அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்க வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும்
வலியுறுத்தினார்.
தோட்டத்துறை
மற்றும் மூலப்பொருள் அமைச்சராகவும் இருக்கும் ஜொஹாரி, இந்தப் பதவிக்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து
தனக்கு ஆதரவு கிடைத்ததாக எழுந்த செய்தியை நிராகரித்தார்.
அம்னோவில் 26
எம்.பி.க்கள் மட்டுமே இருக்கும்போது தாம் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை
என்று அவர் கூறினார்.
இந்த ஒற்றுமை
அரசாங்கம் அமைதியானது மற்றும் நிலையானது, அதன் நிர்வாகத்தை
சீர்குலைக்காதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அன்வாரின் பிரதமர்
பதவிக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நாட்டின் 11வது பிரதமராக ஜொஹாரி நியமிக்கப்படுவார் என்ற
ஊகங்கள் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
பண்டான் நாடாளுமன்ற
உறுப்பினர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி, எட்டு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஜொஹாரிக்கு தங்கள் ஆதரவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக
வதந்திகள் எழுந்துள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
ஒற்றுமை அரசு 2.0 அமைக்க ஜொஹாரிக்கு அதிகாரம் அளிக்க, பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபா மற்றும் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாரிசான் மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *