சொந்த தங்கையிடம் பாலியல் அத்துமீறல்! ஆடவனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை; இரண்டு பிரம்படிகள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 11: இந்த மாத தொடக்கத்தில் தனது தங்கையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக, ஒரு பதின்ம வயது ஆடவனுக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வேலையில்லாத அந்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, நீதிபதி சயானி நோர் இத்தண்டனையை விதித்தார்.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் பத்து பஹாட்டில் உள்ள ஒரு வீட்டில் தனது 14 வயது சகோதரியை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் சுமத்தப்பட்ட இந்தக் குற்றம்  நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படும்.

சிறைத்தண்டனை முடிந்த பிறகு ஒரு வருடம் அவ்வாடவனை போலீஸ் கண்காணிப்பில் வைக்க சயானி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவரின் தாயார் கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, இந்தப் பாலியல் வன்கொடுமை அம்பலமானது.

பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த பிறகு, அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சந்தேகத்தின் பேரில் மருத்துவமனை தரப்பு காவல்துறையில் புகார் அளித்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *