நீதித்துறை நியமனம் அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 11: நீதித்துறை நியமன செயல்முறை அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும் என்றும், கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் அது வரையறுக்கும் அதிகார வரம்பிற்கு ஏற்ப இது அமைய வேண்டும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வரும் திங்கள் கிழமை மலேசிய வழக்கறிஞர் சங்கம் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்க நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதை அடுத்து., அது தொடர்பான கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

இது ஏற்பாட்டாளர்களின் முடிவு என்றாலும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன செயல்முறையை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறினார்.

நடைபயணம் என்பது சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களின் முடிவு, ஆனால் இது  ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது என்று அன்வார் கூறினார்.

 சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ முகமது டுசுகி மொக்தார் ஒரு விளக்கத்தை வழங்கியுள்ளார்.  பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒஸ்மான் சையத் இது குறித்து  விளக்கியுள்ளார். மேலும் மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூட ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார் என்று அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *