CYBERJAYA பல்கலைக்கழக மாணவி கொலையில் மூவர் கைது!

top-news

ஜூன் 27,

CYBERJAYA பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 2 இளம் பெண்கள் உட்பட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் 20 வயது CYBERJAYA பல்கலைக்கழக மாணவியின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதைக் காவல் துறையினர் உறுதிப்படுத்திய நிலையில் 48 மணி நேரத்திற்குள் இம்மூவரையும் கைது செய்துள்ளதாகவும் இன்று காலை Sepang Sesyen நீதிமன்றம் கைது செய்யப்பட்ட மூவருக்கும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணவியின் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மூவரும் 19 முதல் 20 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் கொலை செய்யப்பட்ட மாணவிக்கு அறிமுகமானவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. நேற்று காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணிக்குள் இவர்கள் மூவரையும் ஜொகூர், நெகிரிசெம்பிலான் பகுதிகளில் கைது செய்ததாகவும் 2 இளம்பெண்கள் 1 ஆடவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Kes pembunuhan pelajar Universiti Cyberjaya menyaksikan tiga individu termasuk dua wanita muda ditahan polis. Ketiga-tiganya dikenal pasti mengenali mangsa dan ditahan di Johor serta Negeri Sembilan. Mereka kini direman tujuh hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *