வீட்டில் தீப்பற்றியதில் 78 வயது மாது மரணம்!

- Shan Siva
- 08 Apr, 2025
மாராங், ஏப்ரல் 8: தாமான் எமாஸ் முர்னியில் இன்று அதிகாலை ஏற்பட்ட
தீ விபத்தில் வயதான மாது ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்ப
உறுப்பினர்கள் மூவர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் 78
வயதான ரசைதா முகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாராங் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சோபியான் ரெட்சுவான்
தெரிவித்தார்.
மனநலம்
பாதிக்கப்பட்ட ரசைதா, வீட்டின்
பின்புறத்தில் உள்ள தனது படுக்கையறையில் சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக
நம்பப்படுகிறது.
ரசைதா தனது மகள்
மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் பொதுமக்களால்
காப்பாற்றப்பட்டு கோலா திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு
அனுப்பப்பட்டனர்.
வீடு 60%
அழிந்துவிட்டதாகவும், தீ விபத்துக்கான
காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் முகமது சோபியான் கூறினார்.
தற்போதைய
வெப்பமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், வீட்டுப் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *