தீயினால் வீடுகளை இழந்த 67 பேர்!

top-news

ஏப்ரல் 13,

பின்துலூவில் உள்ள 6 தொடர்க்குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 67 பேர் வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.26 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாக Bintulu மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Wan KamaRudin Ahmad தெரிவித்தார். Sabiew பகுதி குடியிருப்புவாசிகளில் 67 பேர் வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர் வீடுகளாக அமைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியதாகவும் 6 வரிசைகளில் உள்ள தொடர்வீடுகள் தீயில் கருகியதாகவும் Bintulu மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Wan KamaRudin Ahmad தெரிவித்தார். அதிகாலை 2.55 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் Bintulu மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Wan KamaRudin Ahmad உறுதியளித்தார்.

Kebakaran besar di enam kawasan rumah deret di Bintulu menyebabkan 67 penduduk kehilangan tempat tinggal. Api marak dengan pantas kerana struktur rumah bersambung, namun tiada kematian dilaporkan. Kebakaran dikawal sepenuhnya sekitar jam 2.55 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *