3 மோட்டார் சைக்கிள்களை மோதிய வாகனம்! இளைஞர் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 21 Apr, 2025
ஏப்ரல் 21,
சமிஞ்சை விளக்கை மீறி சாலையைக் கடக்க முயன்ற 3 மோட்டார் சைக்கிள்களை வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 22 வயது இளைஞர் பலியானதுடன் 16 வயது சிறுவனும் 22 வயது மற்றோர் இளைஞரும் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஷா அலாமில் உள்ள Kampung Raja Uda சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார். போக்குவரத்து விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள்கள் சமிஞ்சை விளக்கை மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Ramli Kasa தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *