போலி பிறப்புச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக இரு பெண்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 22: குழந்தைகளை வாங்குவதற்கும், மோசடியான பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்த கும்பலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையமான MACC  இன்று காலை ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததை அடுத்து, இருவருக்கும் எதிராக ஏப்ரல் 26 ஆம் தேதி வரை ஐந்து நாள் காவலில் வைக்க நீதிபதி ரெட்ஸா அசார் ரெசாலி உத்தரவு பிறப்பித்தார்.

40 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் நேற்று மதியம் 1 மணியளவில் சிலாங்கூர் MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கும் போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், பிறப்பு பதிவு தொடர்பான லஞ்சத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு அல்லது மலேசிய குடியுரிமை இல்லாத குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களை RM50,000 வரை விற்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *