சக்தி உணவகத்தில் ஆதவன் கலை, கலாச்சார மன்றம் தொடக்க விழா!

- Muthu Kumar
- 28 Jun, 2025
ஆதவன் கலை, கலாச்சார மன்றம் தனது புதிய கிளையை கிள்ளானில் உள்ள சக்தி உணவகத்தில் இன்று ஜூன் 28, 2025 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.
ஆதவன் கலை, கலாச்சார மன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அறிமுக விழாவில், கொடைநெஞ்சரும், தமிழ்ப்பள்ளிகளின் காப்பாளருமான ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஒம்ஸ் பா. தியாகராஜன் தலைமையேற்று தொடக்கி வைப்பார்.
“பெர்சத்துவான் கெபுடாயாயான் செனி பெர்சம்பஹான் அதாஸ் பெண்டாஸ் ஆதவன் கோலாலம்பூர், சிலாங்கூர்” அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பொதுமக்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு, ரவியை 016 9028306 என்ற எண்ணிலும், அல்லாபாஸை 018 2104153 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Majlis Seni dan Budaya Aathavan akan merasmikan cawangannya di Kilang pada 28 Jun 2025. Majlis akan disempurnakan oleh Pengerusi OMS Pa. Thiagarajan. Orang ramai dijemput hadir. Maklumat lanjut hubungi Ravi atau Allabasai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *