தமிழிசை வாணர் இரகுராமன் இயற்கை எய்தினார்!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவில் இசைத்துறையில் மிக முக்கியமான கலைஞராக விளங்கிய, தமிழிசைவாணர்,  இசைச்செல்வர் இரகுராமன் நேற்று காலமானார்.தனது தனித்துவமிக்க குரல் வளத்தால், மக்களை வெகுவாகக் கவர்ந்தவர்.  மலாய் மொழி  பாடல்கள் பாடுவதிலும் வல்லமைப் பெற்றவர். வாழ்நாள் முழுமையிலும் இசைக்கென்றே தம்மை ஒப்படைத்தவர். தமிழியல் பாடல்கள் பலவற்றுக்கும் தாமே முன்வந்து கீர்த்தனை அமைத்தவர். பிறவியிலேயே பார்வை அற்றவராயினும் இசைக்கென வாழ்ந்தவர் இரகுராமன்.  பார்வையற்றோர்க்கான தமிழ்த்தட்டச்சினைத் தாமே உருவாக்கிய பெருமைக்குரியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

ஒலியின் துணையுடனே

உலகத்தை உணர்ந்தறிந்து

கலையின்

அரவணைப்பில்

காலத்தை வென்றுயர்ந்த

கலைச் செல்வர்

ஓய்வைத் தழுவினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *