அன்வாரின் மனதில் இடம்பிடித்த இரகுராமன்

- Shan Siva
- 28 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 28: மலேசிய இசைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் இசைச் செல்வர் இரகுராமன். அன்னாரது மறைவு மலேசியக் கலைத்துறைக்குப் பேரிழப்பு என ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிறவியிலேயே கண் குறைபாடு
இருந்தபோதிலும், இறைவன் கொடுத்த வரத்தால், கலைத்துறையில் ஆயிரக்கணக்கான மக்களை தன் வசம் ஈர்த்தவர்.
பாடல்களைப் பாடுவது
என்பது மட்டுமல்லாமல், பாடல் வரிகளை உருவாக்குவது, இசையமைப்பது என பல்துறை வித்தகராக அவர் திகழ்ந்தார் என
ஒம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
தனது பிறந்த நாளின்
போது கல்வி, கலை, மருத்துவம், விளையாட்டு என ஒவ்வொரு
துறையில் உள்ளவர்களையும் சிறப்பு செய்வது வழக்கம் என்று குறிப்பிட்ட ஓம்ஸ் பா.தியாகராஜன், அப்படி கலைத்துறையில் சிறந்து விளங்கிய இரகுராமன் அவர்களுக்கும்
சிறப்பு செய்திருப்பதாகவும் நினைவுகூர்ந்தார்.
தங்க மோதிரம் வழங்கி
இரகுராமுக்குச் சிறப்புச் செய்ததாகவும், அந்த மோதிரத்தை அன்வார்
இப்ராஹிம் இரகுராமுக்கு வழங்கியதாகவும் அவர் கூறினார். அந்த மேடையில் அன்வாரின் வேண்டுகோளுக்கிணங்க ஓர் இந்திப் பாடலை
இரகுராமன் பாடி, அன்வாரின் மனதில் இடம்பிடித்ததாகவும் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
இந்நிலையில் அன்னாரது மரணத்திற்குத் தாம் வருந்துவதாகவும், அவரது ஆத்ம
சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது இரங்கல் செய்தியில்
தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *