சீனர் பிரதமர் ஆகிவிடுவாரா? டான்ஸ்ரீ தனபாலசிங்கத்தை தெரியுமா? 20 ஆண்டுகளுக்கும் மேல் ஓர் இந்திய வம்சாவளிக்காரர் பிரதமராக இருந்தாரே தெரியுமா? ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி

- Shan Siva
- 28 Jun, 2025
கிள்ளான், ஜூன் 28: சீனர் ஒருவர் ராணுவத்தின் உயர் பதவிக்கு வந்ததும், இனி சீனர் பிரதமர் ஆகிவிடுவார் என்று இப்போது வயிற்றெரிச்சலில் ஒரு சிலர் வார்த்தைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
அப்படியானால், மலேசிய வரலாற்றில் முதன்
முறையாக மலேசிய கடற் படையின் தலைமைத் தளபதியாக உயர்ந்த பொறுப்பில் இருந்தாரே தமிழரான
Tan Sri Dato’ Seri K.
Thanabalasingam அவரைத் தெரியுமா? இந்த உளறுவாய்களுக்கு?
இவர்கள் சொல்கிறபடி பார்த்தால், அவர் பிரதமராகி இருக்கலாமே?
கிள்ளானைச் சேர்ந்த Tan Sri
Dato’ Seri K. Thanabalasingam என்ற அந்தத் தமிழ்ச் சிங்கத்தைப் பிரதமராக ஆக்கியிருக்கலாமே?... அவரை
ஏன் பிரதமராக ஆக்க முடியவில்லை? அவர் ஏன் பிரதமர் ஆகவில்லை என
ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான
ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்..
கிள்ளானைச் சேர்ந்த Tan Sri
Dato’ Seri K. Thanabalasingam சுதந்திர மலேசியாவில் கடற்படையின் முதல் தலைமைத்
தளபதியாகப் பொறுப்பேற்றவர் . 1955 இல் அப்போதைய பிரிட்டன் அரசு
கடற்படையின் கடற்படை அதிகாரியாகவும் அதன் பின்னர் முறையான பயிற்சிக்குப் பின்னர்
1958இல் இரண்டாவது லெப்டினன்டாகவும் அவரை நியமித்தது.
அதன் பின்னர் 1960 இல் மலேசியா திரும்பியதும் போர்ட்டிக்சனில் உள்ள ஃபெடரல்
இராணுவக் கல்லூரியில் கேடட் பயிற்சியாளராகவும், 1963 இல் அப்போதைய தீபகற்ப
மலாயாவின் அரசு பாதுகாப்பு அமைச்சின் கடற்படை இயக்குநராகவும் பணியாற்றினார்.
1967 டிசம்பர் 1 மலேசியாவின் கடற்படைக்குத் தலைமை தளபதியாகப் பொறுப்பேற்றார்.
அதுவரையில் மலேசியக் கடற்படையின் தலைமை தளபதியாகப் பிரிட்டிஷ் நாட்டைச்
சேர்ந்தவர்களே பதவி வகித்த நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
முப்படைகளில் ஒன்றான கடற்படையில் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட முதல் மலேசியராக Tan Sri Dato’ Seri K. Thanabalasingam விளங்கினார் என்று
ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
கடல் படையை சுமார் 8 வருடங்கள் தனது ஆளுமையால் கட்டிக் காத்தார் தனபால சிங்கம்.
அவர் பிரதமராக வந்திருக்கலாமே? ஏன் வரவில்லை? ஆனால், இன்னும் 40 வருடங்களில் சீனர் பிரதமராகிவிடுவார் என்று பயப்பட்டு பேசுகிறீர்கள்
என ஓம்ஸ் பா.தியாகராஜன் சாடினார்.
மலேசிய சீனரான ஜானி லிம் என்பவர், தற்போது ஆயுதப்படையின் லெப்டினெண்ட் ஜெனரலாகப்
பதவி உயர்வு பெற்றுள்ளார். இதுதான் இப்போது
பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அதிலும் பாஸ் கட்சி கடுமையாக தங்கள் விமர்சனத்தை
முன் வைத்து வருகிறது.
2058-ல் மலேசியாவின் பிரதமராக கம்போங் சுங்கை பாருவில் பிறந்த சீன வம்சாவளியான
ஜானி லிம் பிரதமர் ஆவார் என சுங்கைபூலோ பாஸ் கட்சியின் தலைவர் சஹாருடின் முகமட் கருத்து
தெரிவித்துள்ளார். ஜானி லிம்முக்கு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள
முடியவில்லை. அதனால், இப்படி கருத்துரைத்துள்ளார்.
எனவே, ஹாடி அவாங்கின் மருமகனான அவரின் கூற்றுப்படி பார்த்தால், தமிழரான தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ தனபாலசிங்கமும் பிரதமர் ஆகியிருக்கலாமே என அவர்
கேள்வி எழுப்பினார்.
இன்னும் எத்தனை ஆண்டு காலம்தான் இப்படி இனம் மதம் என்று இந்த நாட்டின் வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டையாக இருக்கப் போகிறீர்களோ தெரியவில்லை.
நாட்டின் பிரதமராக வருவதற்கு நாட்டுக் குடிமகனாக, ஆளுமை மிக்க
நபராக, நாட்டை வழிநடத்தும் தகுதிகள் நிறைந்த திறமை மிக்கவராக
இருந்தால் போதுமானது. அதுதான் எந்த நாட்டிற்கும் நல்லது.
திறமையான ஆளுமை மிக்கத் தலைவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததால்தான் இன்று சிங்கப்பூர்
இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்த தேசமாக இருக்கிறது. அப்படியான ஒரு சூழல் நம் தேசத்தில்
அமைவதில் ஒன்றும் தவறில்லை என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
உங்கள் அரசியல் விளையாட்டை வேறு எங்காவது விளையாடுங்கள். நேரம் போகவில்லை என்பதற்காக, இந்த அழகான
தேசத்தில், பல்லின மக்களும் ஒன்றாக வாழும் கூட்டத்திற்கு மத்தியில்
வந்து குப்பைகளைக் கொட்டாதீர்கள். மலாய்காரரோ, சீனரோ, இந்தியரோ யாராக இருந்தால் என்ன? திறமை மிக்கவர் நம்
தேசத்துக்குத் தேவை என்று சொல்வதுதான் ஒரு சிறந்த குடிமகனுக்கு அழகு. திறமை இல்லாவிட்டாலும்
என் ஆளுதான் தேவை என்றால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை என ஓம்ஸ் பா.தியாகராஜன்
கூறினார்.
நீங்கள் ஆளும் மாநிலங்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? உங்களால்
பினாங்கு மாநிலத்தோடு போட்டி போட இயலுமா? இன்று பினாங்கு எங்கே...
உங்கள் மாநிலங்களின் நிலை எங்கே? வெறும் இனம் மதம் என்று குட்டிச்சுவற்றுக்குள்
இருந்துகொண்டு, நீங்கள் ஆளும் மாநிலங்களையும் அதேபோல் வைத்துள்ளீர்கள்; அதுதான் உண்மை என ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
கிளந்தான், திரெங்கானு மாநிலங்களின் மக்களின் நிலையைப் போய்ப் பாருங்கள்.
அவர்கள் எவ்வளவு அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியும்.
சரி, சீன வம்சாவளி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிரதமராக
வரக்கூடாது என்பதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், சுமர் 25 ஆண்டுகள்
இந்த நாட்டின் பிரதமராக இருந்தாரே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகாதீர்? உங்கள் கண்ணில் மிளகாயைத் தூவி விட்டு
தொடர்ந்து நாற்காலியை விட்டு நகராமல் இருந்தாரே? அது உங்களுக்கு
உறைக்கவில்லையா? அவரை மட்டும் ஏன் இவ்வளவு காலம் பிரதமராக வைத்து
அழகு பார்த்தீர்கள். அவரை ஏன் யாரும் எதிர்க்கவில்லை என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
பெரிய கேவலம் என்னவென்றால், தற்போது உங்கள் குழுவுக்கு ஆலோசகராக இந்திய
வம்சாவளியான மகாதிர் குட்டி எனும் மகாதீரைத்தான் நியமித்துள்ளீர்கள். இது எதற்காக? என அவர் கேள்வி எழுப்பினார்.
மகாதிர் உங்களை எல்லாம் ஆட்டிப் படைத்தாரே; அப்போது ஏன் பேசவில்லை? அதை ஏன் விட்டு வைத்தீர்கள். அந்த லட்சணதில் நீங்கள் இருக்கிறீர்கள் என ஓம்ஸ்
பா.தியாகராஜன் கூறினார்.
எனவே, வீணாக உங்கள் அரசியலை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வீண் வாதங்களை
எல்லாம் வைக்காதீர்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
உலகின் மற்ற நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சிங்கப்பூரில் இந்திய
வம்சாவளியைச் சேர்ந்தவர் அதிபராகியிருக்கிறார், அங்கு இதற்கு முன்னர் ஒரு மலாய்க்கார
பெண்மணிதான் அதிபராக இருந்தார். பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரதமராக இருந்தார், அமெரிக்காவில்
கமலா ஹாரிஸ் துணை அதிபராக இருந்தார். இந்தியாவில் ஒரு முஸ்லிமான
அப்துகலாம் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர்கள் அத்தனை பேரும் அந்த நாடு நன்றாக
இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், திறமையின் அடிப்படையில் அந்த
நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இனம் மதம் எதையும் பார்க்காமல் அவர்கள்
தேர்வு செய்யப்பட்டனர் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து பிரிந்துபோன ஒரு நாடு.
நம் நாட்டைப் போல் அவர்களுக்கு வளம் இல்லை. ஆனால் இன்று அதன் பொருளாதாரம் உச்சத்தில்
உள்ளது. அதற்குக் காரணம் இது போன்ற பாகுபாடுகள் அங்கு இல்லை என ஓம்ஸ் பா.தியாகராஜன்
தெரிவித்தார்.
ஒரு காலத்தில் அந்தப் பாகுபாடுகள் எல்லாம் இல்லை. அதனால்தான் துன் சம்பந்தன்கூட
1 நாள் பிரதமராக ஆக இங்கே முடிந்தது.
அதற்காக இங்கே பிரதமர் பதவியை யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் மலேசியத் திருநாட்டின்
சட்ட திட்டங்கள் எல்லாருமே அறிந்ததுதான். இங்கே பிரதமராக யார் வர வேண்டும் என்பதை சட்டம்
சொல்கிறது. இது பாஸ் காட்சியினருக்குத் தெரியாதா? பிறகு ஏன் சீனர் பிரதமராகி விடுவார்
என்று பயப்படுகிறீர்கள். அதற்கு வாய்ப்பே இல்லை எனும்போது, இது
தேவையற்ற வீண் சர்ச்சைதான் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
சட்டதிட்டத்தின் படி தகுதியான ஒருவர் பிரதமராக வர வேண்டும் அதுவே எங்கள் விருப்பம்.
உங்களுக்கு ஆதரவு இருக்கிறது, மதம் இருக்கிறது, மக்கள்
இருக்கிறார்கள் என்பதற்காக தகுதியற்ற ஒருவரை தலைமைப் பொறுப்புக்கு வைத்துவிடக்கூடாது
என்பதுதான் எல்லாரது எண்ணமும்.
இன்று பிரிவினையை விட்டால் உங்களைப் போன்ற நபர்களுக்கு பிழைப்பை நடத்த வேறு வழியில்லை என்பதால், இப்படி ஏதாவது உளறிக்கொண்டிருக்கிறீர்கள் என ஓம்ஸ் பா.தியாகராஜன் சாடினார்.
இன்று சீனர் பிரதமர் ஆகிவிடுவார் என்று
ஆரூடம் சொல்கிறீர்கள். சீனர்கள் மீது வெறுப்பைக் காட்டுகிறீர்கள்.
ஆனால், 2008-ல் அமைக்கப்பட்ட பக்காத்தான் கூட்டணியில், இந்த சீனர்கள்கூடதான் நீங்களும் இருந்தீர்கள். 2015 வரைக்கும் ஒன்றாக இருந்தீர்கள். அப்போது உங்களுக்குப்
பிரச்னையாகத் தெரியவில்லையா?
இப்போது கூட நீங்கள் மீண்டும் பக்காத்தான் கூட சேரமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்
உண்டு? பதவிக்காக் நீங்கள் எதையும் செய்வீர்கள். எனவே வார்தைகளை பார்த்துப் பயன்படுத்துங்கள்
என ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தினார்.
அதேபோல், இந்த விவகாரம் குறித்து பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர்
கமில் முனிம் கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது
என்றும் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
இதுபோன்ற கூற்றுகளுக்கு கமில் முனிம் போன்ற இளைஞர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். அவர் கொடுத்துள்ளார். அந்தப் பண்புக்குப் பாராட்டுகள் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *