பள்ளியில் பாகிஸ்தானியர் துவக்கி வைத்த ஓட்டப் போட்டி- கல்வி அமைச்சு விசாரணை!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூன் 28-

பேராக் மாநிலத்தின் கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் துவக்கி வைத்திருப்பதாகக் கூறப்படும் சம்பவத்தை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.

“இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம்” என்று, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

ஈப்போவில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவில், பேராக் ஆட்சியாளர் நஸ்ரின் ஷாவினால் துவக்கி வைக்கப்பட்ட பேராக் மாநில அளவிலான மால் ஹிஜ்ரா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சிம்பாங் அம்பாட் செமாங்கோலில் உள்ள சமா காஹ்கா தேசியப் பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயப் போட்டியை பாகிஸ்தானியர் ஒருவர் துவக்கி வைத்ததாகக் கூறப்படும் காட்சிகள் அடங்கிய ஒரு காணொளி சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Kementerian Pendidikan sedang menyiasat dakwaan seorang warga Pakistan merasmikan acara sukan di sebuah sekolah di Kerian, Perak. Menteri Pendidikan, Fadhlina Sidek, mengesahkan siasatan sedang dijalankan selepas video kejadian itu tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *