அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்தாதீர்-சமூகத் தலைவர்களுக்குப் பேரரசர் நினைவூட்டல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 28-

தனிப்பட்ட ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாமென்று சமூகத் தலைவர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கடுமையாக நினைவூட்டியுள்ளார்.

அதற்கு மாறாக, நற்பண்புகள், நீதி மற்றும் கருணை ஆகியவற்றின் அடிப்படையிலான தேசிய நல்லாட்சிக்கு ஓர் அடித்தளமாக இஸ்லாத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும்
உள்ளடக்கக்கூடிய ஒரு முழுமையான, நேர்த்தியான மதமாக இஸ்லாம் விளங்குகிறது. ஆகவே, அரசியல் ஆதாயத்திற்காகவும் அவதூறுகளைப் பரப்புவதற்காகவும் அல்லது வெறுப்பைத் தூண்டிவிடுவதற்காகவும் அதனைப் பயன்படுத்த கூடாது.இதனால், சமூகத்தில் பிளவு ஏற்படும் என்றார் அவர்.

கோலாலம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற தேசிய நிலையிலான மால் ஹிஜ்ரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோது சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

Sultan Ibrahim menegaskan agar Islam tidak disalahguna untuk kepentingan peribadi atau politik. Sebaliknya, Islam harus menjadi asas kepada tadbir urus negara berlandaskan akhlak, keadilan dan belas kasihan demi keharmonian dan perpaduan masyarakat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *