சிறப்புத் தேர்ச்சி பெற்ற STPM மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் முதலுரிமை வழங்க வேண்டும்! – டி.ஏ.பி

top-news

ஜூன் 28,


அரசு பொதுப்பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தேர்வு முறையின் போது சிறப்புத் தேர்ச்சி பெற்ற STPM மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சை டி.ஏ.பி இளைஞர் பிரிவு தலைவர் Woo Kah Leong வலியுயுறுத்தினார். STPM தேர்வில் 4.0 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் பொதுப்பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு செய்யும் துறைகள் வழங்கப்படாமல் தவிர்க்கப்படுவதாகவும் மற்ற துறைகளில் இளங்கலை கல்வியைத் தொடர்வதாகவும் Woo Kah Leong சுட்டிக்காட்டினார். 

இந்த சிக்கலை உயர்கல்வி அமைச்சு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் STPM தேர்வில் 4.0 புள்ளிகள் பெற்று சிறந்த அடைவுநிலையைப் பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தானியங்கி முறையில் அவர்களுக்குப் பொதுப்பல்கலைக்கழகத்தில் அவர்களுக்கு விருப்பமானத் துறையில் இடம் கிடைக்க வேண்டும் என்றும் Woo Kah Leong வலியுறுத்தினார். பொதுப்பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேசன் மாணவர்களுக்கு நிகராக STPM தேர்வில் 4.0 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட வேண்டும் என Woo Kah Leong கேட்டுக்கொண்டார்.


DAP mendesak Kementerian Pendidikan Tinggi memberi keutamaan kepada pelajar STPM cemerlang ber-GPA 4.0 dalam pemilihan universiti awam. Woo Kah Leong berkata mereka harus diterima secara automatik ke bidang pilihan setara pelajar matrikulasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *