மக்களுக்கான சிறப்பு நலத்திட்டம்... இரு நாள்களுக்குள் அறிவிக்கப்படும்! – அன்வார்

- Shan Siva
- 21 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 21: மக்களுக்கான நற்செய்தியாக ஒரு சிறப்பு நலத்திட்ட தொகுப்பு நாளை அல்லது புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொகுப்பின்
விவரங்களை இறுதி செய்ய கூடுதல் நேரம் தேவை என்று அன்வார் கூறினார். இது அழுத்தமான பிரச்சினைகளை திறம்பட நிவர்த்தி செய்வதை உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ
அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு கவனமாக மதிப்பாய்வு செய்வது அவசியம் என்று அவர்
வலியுறுத்தினார்.
ஒரு நாள் அல்லது
இரண்டு நாட்களுக்குள் ஓர் அறிவிப்பை வெளியிடுவேன் தாம் ஏற்கெனவே குறிப்பிட்டதாகவும், ஆனால் அதற்கு கவனமாக சில மதிப்பாய்வு தேவை என்று அவர்
மேலும் கூறினார்.
வரவிருக்கும் தொகுப்பு, பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மலேசியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *