தாப்பா - பீடோர் பிளஸ் நெடுஞ்சாலையில் விபத்து! - மூவர் பலி

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூலை 22: தாப்பா-பீடோர் பகுதிக்கு அருகிலுள்ள தெற்கு நோக்கிச் செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையில் KM328.9 இல் இன்று இரண்டு வாகனங்கள் மோதியதில் மூன்று மூத்த குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

 காலை 11.19 மணிக்குத் பேரிடர் அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு ஏழு பணியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

இறந்தவர்கள் மூவரும் 70 வயதிலிருந்து 77 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒரு டொயோட்டா வியோஸ் மற்றும் ஒரு புரோட்டான் X50 சம்பந்தப்பட்டிருந்த நிலையில், வியோஸில் இருந்த ஒருவர் காயமடைந்தார். புரோட்டான் X50 இல் இருந்த ஐந்து பேரில், இரண்டு பேர் காயமடைந்தனர், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சபாரோட்ஸி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும் என்றும் தாப்பா காவல்துறைத் தலைவர் ஜொஹாரி யஹ்யா தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *