பத்து பூத்தே விவகாரம்.. வயது காரணமாக மகாதிர் மீது சட்ட நடவடிக்கை இல்லை! - அன்வார்

- Shan Siva
- 22 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 22: பத்து பூத்தே பிரச்னையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் வயது காரணமாக, அவர்மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
பத்து பூத்தேவின்
இறையாண்மை தொடர்பான மறுஆய்வு விண்ணப்பங்களை நிறுத்துமாறு 2018 ஆம் ஆண்டில் அமைச்சரவையை செல்வாக்கு செலுத்த மகாதிர் வேண்டுமென்றே
செயல்பட்டிருக்கலாம் என்று கடந்த ஆண்டு ஒஅரச விசாரணை ஆணையம் (RCI) கண்டறிந்தது.
மோசடி
செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 415(b) இன் கீழ்
குற்றவியல் விசாரணை தொடங்கப்படலாம் என்று கூறி, மகாதிர் மீது போலீஸ்
அறிக்கை தாக்கல் செய்ய RCI பரிந்துரைத்தது.
இந்நிலையில் அன்வார்
இதனைத் தெரிவித்துள்ளார். மகாதீர் தவறு செய்துள்ளார் என்று அன்வார் நாடாளுமன்றத்தில்
இன்று தெரிவித்தார்.
ஆனால், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை
ஒப்புக்கொள்ளவில்லை. மகாதிரின் வயது 100 என்பதால் இம்முடிவை எடுத்ததாக அன்வார் கூறினார்.
2008 ஆம் ஆண்டில், சர்வதேச நீதிமன்றம் (ICJ) பத்து பூத்தேவை சிங்கப்பூருக்கும், மிடில் ராக்ஸ்
மலேசியாவுக்கும் வழங்கியது. பிராந்திய நீர் எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் சவுத்
லெட்ஜின் உரிமையை தீர்மானிக்க விடப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், பத்து பூத்தே மீதான தனது
முடிவை மறுபரிசீலனை செய்ய புத்ராஜெயா ICJ-யிடம்
விண்ணப்பித்தது மற்றும் அதன் முடிவில் இருந்து எழும் சில தெளிவின்மைகள் மற்றும்
தாக்கங்கள், குறிப்பாக சவுத் லெட்ஜின் நிலை குறித்து
விளக்கக் கோரியது.
இருப்பினும், மே 2018 இல் 14வது பொதுத் தேர்தலில்
வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மகாதிர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான்
அரசாங்கம் அடுத்த மாதம் விசாரணைக்கு வருவதற்கு முன்பு இரண்டு விண்ணப்பங்களையும்
திரும்பப் பெற்றது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *