தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணுங்கள் !- அன்வார் அமைச்சர்களுக்கு அறிவுறுத்து

- Shan Siva
- 23 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 23: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனைத்து அமைச்சர்களும் தணிக்கையாளர், தலைமை கணக்காளர்
அறிக்கை 2/2025 இல் எழுப்பப்பட்ட தொடர்ச்சியான பிரச்சினைகளை முழுமையாகக் கையாண்டு
செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவற்றை முழுமையாக
மதிப்பாய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையில்
எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு
விமர்சனமும் மீண்டும் நிகழாமல் தடுக்க ஒரு பாடமாக செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
அனைத்து
அமைச்சர்களும் அறிக்கையில் எழுப்பப்பட்ட ஒவ்வொரு கருத்தையும், ஆராய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *