இறந்தவர்களாக இருந்தாலும் மோசடி நிதியை மீட்பது அரசின் கடமை! – அன்வார்

- Shan Siva
- 24 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 24: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இறந்தவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆதரித்தார். தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியை மீட்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று அவர் இன்று கூறினார்.
சந்தேகத்திற்குரிய
வழிகளில் சொத்து குவித்த சந்தேக நபர்கள் வயதானவர்களாகவோ அல்லது இறந்தவர்களாகவோ
இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எதிர்க்கட்சியினர் உட்பட சிலர்
சிக்கல்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
இறந்தவர்களைத்
தண்டிக்க நாங்கள் விரும்பவில்லை. மோசடி செய்யப்பட்ட நிதியை மட்டுமே நாங்கள்
மீட்டெடுக்க விரும்புகிறோம் என்று அவர்
புத்ராஜெயாவில் நிதி அமைச்சகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *