செராஸில் இருவர் சுட்டுக் கொலை! - போலீஸ் அதிரடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 25: இன்று அதிகாலை, செராஸ், ஜாலான் செமரா பாடியில், போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுதமேந்திய கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இரண்டு வெளிநாட்டு ஆடவர்கள் கொல்லப்பட்டனர்.
அதிகாலை 3.45 மணிக்கு போலீசார் அவர்களை எதிர்கொண்டபோது, சந்தேக நபர்கள் புதிய இலக்கைத் தேடுவதாக உளவுத்துறை தெரிவித்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு சுபாங் ஜெயாவில் திருடப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளை நிற ஹோண்டா சிவிக் காரில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றபோது, துப்பாக்கிச் சூடு பிரயேகம் நடத்தப்பட்டதால், சந்தேக நபர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்று அவர் அந்த இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
வாகனத்தில் இருந்து திருடும் கருவிகள், போதைப்பொருள், ஒரு ரிவால்வர் மற்றும் ஒருதானியங்கி கைத்துப்பாக்கியை போலீசார் மீட்டதாக ஃபாடில் கூறினார்.
2022 முதல், சந்தேக நபர்கள் 50 வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுதாகவும், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதனால் RM 30 லட்சத்துக்கும்  அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளத என்று அவர் தெரிவித்தார்.
சுமார் 15 பேர் கொண்ட கும்பல், கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் செயல்பட்ட நிலையில், தற்போது அக்கும்பலைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள சந்தேக நபர்களை போலீசார் கண்காணித்து வருவதாக டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *