RM 100 உங்கள் மை கார்டில் வரவு வைக்கப்படும்! எந்த விண்ணப்பமும் தேவையில்லை! போலியான வாட்ஸாப் செய்திகளை கிளிக் செய்ய வேண்டாம்! – அமைச்சு அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 26: SARA திட்டத்தின் கீழ் ஒரு முறை வழங்கப்படும் RM100 ரொக்க உதவி தொடர்பாக மோசடிகள் மற்றும் பிற மோசடி முயற்சிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

பினாங்கு, ஜார்ஜ் டவுனில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங், இந்த உதவிக்கு எந்த விண்ணப்பமோ அல்லது பதிவுகளோ தேவையில்லை என்று கூறினார்.

ஆகஸ்ட் 31 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களின் MyKad-இல் இந்தத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

RM100 SARA உதவிக்கு எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து எங்களுக்கு ஏராளமான விசாரணைகள் வந்துள்ளன. உதவியைப் பெறுவதற்கு பதிவு அவசியம் என்று கூறும் போலி இணைப்புகள் மற்றும் செய்திகள் குறித்தும் புகார்கள் வந்துள்ளன என்று அவர் கூறினார். எனவே பதிவு என்ற ஒன்றே கிடையாது என அவர் தெரிவித்தார்.

இந்த கூற்றுக்கள் தவறானவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், அவை மோசடி லிங்காக இருக்கும்  என்று அவர் இன்று நடந்த ஒரு நிகழ்வில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் பண உதவி கிடைக்கும் என்பதால், கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். ஆகஸ்ட் 31 க்குப் பிறகு அவர்கள் அதைப் பெறவில்லை என்றால் மட்டுமே நாங்கள் மேலும் நடவடிக்கை எடுத்து அதற்கேற்ப அவர்களுக்குத் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *