சத்திரிய முனைவோர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 10,038 ஏக்கர் ஈயச் சுரங்கம் -தலைவர் ஓம்ஸ் தியாகராஜன்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

தெலுக் இந்தான், டிச.30-

அரசாங்கத்தினால் சட்ட ரீதியாகவும், முறைப்படியும் “சத்திரியா முனைவோர்கள் கூட்டுறவு கழகம்” என்னும் அமைப்பு சுதந்திர மாதத்தில் கடந்த 8.8.2024 அங்கீகாரம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.அரிமா சங்கத்தின் தேசியத் தலைவருமான அவர் தொடர்ந்து கூறுகையில், கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்ட இந்த குறுகிய காலகட்டத்தில், கோல சிலாங்கூர் தொகுதியில், 10,038 ஏக்கர் (ஈய வயல்) நிலப்பரப்பிலான ஈயச் சுரங்கம் கிடைக்கப் பெற்றுள்ளோம் என்றார்.




இதன் மூலம் நம் இளையோர் சமுதாயம் உட்பட தொழில் முனைவோர்கள் எண்ணிக்கையில் மேலும் அதிகரிக்கும் வண்ணம், இந்த கோல சிலாங்கூர் ஈயச்சுரங்கம் தனது வருமானத்தில் இந்த கூட்டுறவு ஒரு தங்கச் சுரங்கமாக சமூகத்தை
முன்னெடுத்துச் செல்லும் என்பதில் கூட்டுறவு சங்கம் தனது செயல் திட்டத்தின் மூலம் உறுதிப்படுத்துகிறது என சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வாரியக் குழு தலைவருமான அவர் எடுத்துரைத்தார்.

நம் நாட்டை பொறுத்தவரை சமுதாயத்தின் சார்பில், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக துன்.வீ.தி.சம்பந்தனார் அவர்கள் ஆரம்பித்து வைத்த தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. அதன் பிறகு எத்தனையோ கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டன.




கூட்டுறவு சங்கத்தை நடத்துவது ஒரு சாதாரணமான விசயமாகக் கருதமுடியாது. அதற்கு உண்மை, நேர்மை மற்றும் உழைப்பு ஆகியவை கூட்டுறவுக்கு நாடித் துடிப்பாக இருந்தால் தான், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் போல் ஆலமரமாய் மக்கள் மத்தியில் மதிக்கப்படும் என  தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் குறிப்பிட்டார்.

அவர் மீண்டும் சத்திரியா முனைவர்கள் கூட்டுறவு குறித்து பேசும்போது, என்.எல்.எப்.சி கூட்டுறவுக்கு அடுத்த நிலையில் நமது கூட்டுறவு பீடுநடை போடுவதற்கான அனைத்து ரீதியிலும் முழு கவனம் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், நம்மிடையே தொழில் ரீதியாக சிறந்த அனுபவம் உள்ளவர்கள் இருக்கின்றனர் என்றும் விவரித்தார்.

இந்த கூட்டுறவு திட்டத்தின் முதன்மையாக 100 அடிக்கும் கீழே ஈய சுரங்க நிலத்தில் ஈயம் எடுத்த பின்பு அங்கு தண்ணீர் குளங்கள் தோற்றம் பெறும் நிலையில், அந்த தண்ணீர் விலைக்கு விற்கப்படும். நடப்பில் அரசாங்கத்திற்கு தண்ணீரை இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த ஈயச் சுரங்கத் திட்டம் என்பது குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் தொடரும் என்றார்.

அந்த தண்ணீரை சுகாதார ரீதியாக சுத்திகரிப்பு செய்த பின்புதான் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். அதுதான் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. இந்த செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன் பல ஆண்டுகள் கூட்டுறவுக்கு நன்மைகள் கிடைக்கப்பெறும் திட்டமாகும். அந்த சூழ்நிலையில், சோலார் உள்ளிட்ட மின்சார திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.




தமிழர்கள் மிகுதியாக வாழும் இடமான கோலசிலாங்கூர் மாவட்டத்தில் பல கூட்டுறவு சங்கங்ளுக்கு பெயர் பெற்றுள்ள இடமாகும்.
மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம், தெலுக் இந்தான் கிளைத் தலைவர் முனியாண்டி கோவிந்தராசு தலைமையில் 4 ஆவது ஆண்டாக நேற்று முன் தினம் 28.12.2024 சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் இங்குள்ள நோவா மையத்தில் தேசியத் தலைவர் ஒம்ஸ் பா.தியாகராஜனின் சிறப்பு வருகையுடனும், பேருரையுடனும் “குடும்பதின விருந்தோம்பல்” இனிதே நடந்தேறியது.

மேலும், துணைத் தலைவர் பாண்டி தேவன், பேரா மாநில தொடர்பு குழு தலைவர் க.முனியாண்டி சிலாங்கூர் மாநில முன்னாள் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் ஆசிரியர் முருகன் உள்ளிட்டவர்களும், மாநிலத்தில் உள்ள கிளைகள் சார்பிலும், ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்வில் அறுசுவை உணவுடன் அதிர்ஷ்டக் குலுக்கலும் இடம் பெற்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *