பெரிக்காத்தானுக்கு விண்ணப்ப கடிதம் அனுப்பினோமா? அப்படியெல்லாம் இல்லை! - ம.இ.கா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிசம்பர்1: மஇகா பெரிகாத்தான் நேஷனலுக்கு விண்ணப்பக் கடிதத்தை அனுப்பவில்லை என்றும் மாறாக அக்கூட்டணியில் சேர முடிவு செய்வதற்கு முன்பு கூடுதல் தகவலுக்கான விசாரணையை அனுப்பியுள்ளது என்றும் மஇகா பொதுச் செயலாளர் எஸ். அனந்தன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் சேர மஇகா விண்ணப்பித்துள்ளதாக நேற்று PN தலைவர் முகைதீன் யாசின் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஇகாவின் விண்ணப்பம் விரைவில்  மன்றம் கூடும் போது PN உச்ச கவுன்சிலால் கூட்டாக முடிவு செய்யப்படும் என்றும், PN-கூறு கட்சிகள் அனைத்தும் கொள்கையளவில் MIC கூட்டணியில் சேருவதை ஆதரிக்கின்றன என்றும் முகைதீன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *