இன வெறியை முறியடிப்பதுதான் முக்கிய சவால்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 17: வெற்றிபெற வேண்டுமானால் வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதை நாடு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இதுபோன்ற தடைகளை கடக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், ஒற்றுமையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் மலேசியா போன்ற பல்லின நாட்டில் புதிதல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

நாம் ஒரு ஐக்கியப்பட்ட சமூகமாக அவ்வாறு செய்ய வேண்டும். தேசிய ஒற்றுமை, இனப் பிரிவினை மற்றும் இனவெறியை முறியடிப்பதுதான் முக்கிய சவால் என்பது உண்மைதான்.

அதனால்தான் தாம எப்போதும் ஒன்றாக வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாக, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன சட்டமன்ற மண்டபத்தில் நடந்த சீனப் புத்தாண்டு திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் கூறினார்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் சாங் லி காங், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் மற்றும் மலேசியாவுக்கான சீனத் தூதர் ஓயாங் யுஜிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல்லின சமூகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு ஏற்கனவே பலனளித்துள்ளது என்றும், மலேசியாவின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் பொருளாதார குறிகாட்டிகளுடன் இருப்பதாகவும் அன்வர் கூறினார்.

அதனால்தான் மலேசியாவின் பல்லின சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்க சில பிரச்சினைகள் வரும்போது தனத அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

அதன் மக்கள் மோதலில் ஈடுபட்டால் எந்த நாடும் செழிக்க முடியாது என்பதால் அத்தகைய அணுகுமுறை மிக முக்கியமானது என்று அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

K.v.nathan

இனங்களுக்கான ஒற்றுமையை வளர்க்கும் அரசாங்கமாக தெரியவில்லை. இதற்கு சான்று கடந்த பொதுத்தேர்தலில் இந்தியர்களுக்கு வழங்கிய வாக்குருதிகளே சான்று