RM3.6 மில்லியன் மதிப்பிலானப் பொருள்களுடன் 10 வெளிநாட்டினர் கைது!

top-news

பிப்ரவரி 8,

தேசிய குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் RM3.6 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் பொருள்களுடன் 10 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் BRICKFIELD சிலாங்கூரில் KLANG என இரு வெவ்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டதில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ரொக்கப்பணங்கள் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பாட்டிருப்பதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

இச்சோதனையின் போது சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்த 10 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பெண்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டினர்களும் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கூலியாட்கள் மட்டுமே என்றும் இவர்கள் இந்தியா இந்தோனேசிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களையும் பொருள்களையும் மலேசியாவுக்குள் கொண்டு வருவதாகவும் ஒரு நாளைக்கு RM 15,000 முதல் RM 60,000 வரையில் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.

Sepuluh warga asing termasuk lapan dari India dan dua wanita Indonesia ditahan dalam serbuan Jabatan Imigresen. Mereka didapati menyimpan barang seludup bernilai RM3.6 juta di Kuala Lumpur dan Klang. Siasatan awal menunjukkan mereka hanya pekerja upahan dalam sindiket penyeludupan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *