பகடிவதையில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

top-news

டிசம்பர் 18,
சக மாணவரைப் படுகாயம் அடையும் அளவிற்குப் பகடிவதைச் செய்ததாக நம்பப்படும் 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 முதல் 22 வயதுக்குற்பட்ட 12 மாணவர்களும் பொதுப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் என கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zaki Wan Mohd Ismail தெரிவித்தார். 

பகடிவதையால் பாதிக்கப்பட்ட 20 வயது மாணவரின் தந்தை புகார் அளித்ததை அடுத்து மாணவர்கள் தங்கும் விடுதியில் இருந்த 12 மாணவர்களையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மலாக்காவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்குக் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது மகன் தம்மை கொடுமையாகப் பகடிவதைச் செய்வதாகத் தெரிவித்த நிலையில் திங்கட் கிழமை பாதிக்கப்பட்ட 20 வயது மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 pelajar universiti awam berusia 20-22 tahun ditahan kerana membuli rakan sehingga cedera. Kes disiasat selepas laporan dibuat oleh bapa mangsa, yang kini dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *