தாய்லாந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1200 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 27: தெற்கு தாய்லாந்தில் உள்ள ஹட்யாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் கடுமையான வெள்ளம் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், சுமார் 1,200 மலேசியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது.

கனமழை மற்றும் வலுவான நீரோட்டங்கள் நடவடிக்கைகளை சிக்கலாக்கும் வகையில் இருப்பதால், சோங்க்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகமும் பாங்காக்கில் உள்ள தூதரகமும் மீதமுள்ள மலேசியர்களை மீட்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை மொத்தம் 340 மலேசியர்கள் மீட்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 870 பேர் மீட்கப்பட்டனர்.

சிக்கலில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில், அதிக நீர் மட்டம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

அவசர மருத்துவ அல்லது நலன்புரி உதவி தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசிய அரசு சாரா நிறுவனங்களும் தாய்லாந்து இராணுவமும் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அவசரத் தேவையில் உள்ளவர்களுக்கு வழங்குவதில் ஈடுபட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள மலேசியர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும், விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அமைச்சு வலியுறுத்தியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *