போலி ஆவணங்கள் பயன்டுத்திய 129 வெளிநாட்டினர் கைது!

top-news

டிசம்பர் 23,

வெளிநாட்டினர்களுக்கு மலேசியர்கள் எனும்படியான அடையாளத்துடன் போலி ஆவணங்கள் தயாரித்து பணிக்கு அமர்த்திய தொழில்சாலை உரிமையாளர்கள் ஐவரையும் 129 வெளிநாட்டினரையும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர். 

பல்வேறு நாடுகளிலிருந்தள சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறியவர்கள் சுய அடையாளத்தை மறைத்து போலி ஆவணங்களுடன் மலேசியர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஜொகூர் செனாய் பகுதியில் இயங்கி வரும் சம்மந்தப்பட்ட தொழில்சாலையின் உரிமையாளரையும் மேலாளர்களையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் 129 வெளிநாட்டினர்களிடம் இருந்த போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்களையும் கைது செய்துள்ளதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Johor Imigresen menahan 129 warga asing yang menggunakan dokumen palsu untuk menyamar sebagai rakyat Malaysia serta lima pemilik kilang. Semua dokumen palsu dirampas, dan siasatan sedang dijalankan terhadap majikan dan pekerja.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *