லஞ்சம் பெற்ற வங்கி அதிகாரிகள் 12 பேர் கைது! - MACC அதிரடி

- Shan Siva
- 15 Jan, 2025
புத்ராஜெயா, ஜன 15: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC, உள்ளூர் வங்கி
நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறுவதற்கான ஒரு கும்பலை முறியடித்ததோடு 12 பேரை
கைது செய்துள்ளது.
ஆரம்பக்கட்ட
விசாரணைகளின் அடிப்படையில், பல வங்கிகளின்
அதிகாரிகள், சில
வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட கடன்களைச் செயல்படுத்தவும் அங்கீகரிக்கவும்
உதவியதற்காக கையூட்டு
பெற்றதாக MACC தலைமை ஆணையர்
அசாம் பாக்கி கூறினார்.
வங்கி அதிகாரிகள்,
திருப்பிச் செலுத்தப்படாத கடன்களைக் கொண்ட அரசு
ஊழியர்களைக் கொண்ட வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, பின்னர் அவர்கள்
நிதி ஆலோசனை நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள். இதன் வழி நிதி ஆலோசனை நிறுவனம்
கையூட்டி கொடுத்து வந்துள்ளதாக ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
நிதி ஆலோசனை
நிறுவனம் கடன்களைப் பெறுவதற்காக பல நிதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தவறான
தகவல்களைக் கொண்ட ஆவணங்களை வழங்கியதாக நம்பப்படுவதாக அசாம் கூறினார். கடன்
வாங்கியவர்களுக்கு அவர்களின் பழைய கடன்களைத் தீர்க்க நிறுவனம் முன்கூட்டியே பணம்
கொடுத்ததாகவும் கண்டறியப்பட்டது.
கடன்
அங்கீகரிக்கப்பட்டதும், கடன் வாங்கியவர்
முன்பணத்தை (நிதி ஆலோசனை நிறுவனத்திடமிருந்து) திருப்பிச் செலுத்துவார், மீதமுள்ள கடன் நிலுவை முதலீட்டுத் திட்டத்தில்
முதலீடு செய்யப்படும்,” என்று அவர்
கூறினார்.
ஊழல் தடுப்பு
நிறுவனம் பல்வேறு பிராண்டுகளின் ஒன்பது வாகனங்களையும். RM11.1 மில்லியன்
என மதிப்பிடப்பட்ட 17 சொகுசு கைக்கடிகாரங்கள் மற்றும் RM430,000 க்கும் அதிகமான மதிப்புள்ள ஐந்து பிராண்டட்
கைப்பைகளையும் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
20 மற்றும் 40
வயதுடைய 10 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய சந்தேக நபர்கள் நேற்ற காலை
மாஜிஸ்திரேட் இர்சா ஜுலைகா ரோஹனுதீனிடம் ஒப்புதல் பெற்ற பிறகு ஐந்து நாட்களுக்கு
காவலில் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *