இந்திய - சீன சமூகங்களுக்கு உதவுவதற்கான முயற்சியில், ரிம12 மில்லியன் ஒதுக்கீடு!

- Muthu Kumar
- 27 Nov, 2024
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, நவ.27-
2025 ஆம் ஆண்டு ஜொகூர் பட்ஜெடில் இந்த மாநிலத்தில் ஒற்றுமையை மேம்படுத்தவும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், சமூ கத்தை பலப்படுத்துவதற்கும் முக்கியமான சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சியில், மாநில அரசு ரிம 6 லட்சத்தை கொம்யூனிட்டி ருக்குன் தெத்தாங்கா (Neighbourhood Watch) வுக்கு தனித்துவமான உதவிக்கு ஒதுக்கி, அவர்களது பகுதிகளில் பல்வேறு செயல்பாடுகளை நடத்த சிறப்பான ஆதரவு வழங்குகிறது.
அதேபோல், ஜொகூர் மக்களிடையே ஒற்றுமை மதிப்புகளை பலப்படுத்த தேவையான “சினர்ஜி அன்னா ஜொகூர்" திட்டத்துக்காக ரிம 4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி, ஜொகூர் சட்டமன்ற கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்திய மற்றும் சீன சமூகங்களுக்கு உதவுவதற்கான முயற்சியில், ரிம 12 மில்லியன் தொகை சுல்தானா அறக்கட்டளை, சுல்தானா ரோகையா அறக்கட்டளை மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற சங்கங்களுடன் இணைந்து மக்களுக்கான நலப்பணிகளை விரிவுபடுத்த மற்றும் சமூக நலன்களை வலுப்படுத்த வழங்கப்பட உள்ளது. இந்திய மற்றும் சீன மாணவர்களுக்கான பொதுவான கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.
பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறையில், குறிப்பாக ஜொகூர் வருகைதரும் ஆண்டை முன்னிட்டு, ரிம 6.8 மில்லியன் தொகை தாமான் போத்தானி டிராஜா, இஸ்தானா பெசார், மற்றும் பங்குனான் சுல்தான் இப்ராகிம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான பணிகள் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இவை 2025 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும், ரிம7 மில்லியன் தொகை தொகோஹ் பண்பாட்டு அருங்காட்சியகத்தின் புதுப்பிப்புக்கான திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும், ரிம 8.12 லட்சம் ஜொகூர் பாரம்பரிய நிதி மூலமாக ஜொகூர் கலாச்சாரத்தை மக்களுக்குப் பரப்புவதற்கான உதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுல்தான் அபு பாக்கார் பாரம்பரிய காம்ப்ளெக்ஸை வார இறுதிகளில் திறந்து, ஜொகூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை அனுபவிக்க உதவப்படும். ரிம 1 மில்லியன் ஜொகூர் மக்கள் ஜாபின் விழாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது ஜாபின் நடனக் கலையை எல்லா தரப்பு மக்களுக்கும், ஆரம்பப்பள்ளி குழந்தைகள் முதல் இளைஞர்களும் பெரியவர்களும் அனுபவிக்க உதவ உள்ளது என கூறினார். இந்த பல்வேறு முயற்சிகளுடன். 2025 ஜொகூர் பட்ஜெட்டில் இந்த மாநிலத்தை ஒற்றுமை. பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் பெற வைக்க உதவும். மேலும் ஜொகூர் மக்களுக்கு பலன்களை வழங்கும் என ரவீன் குமார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *