பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பெண்கள் கைது!

top-news

டிசம்பர் 27,

உரிமம் இல்லாது செயல்பட்டு வந்த கேளிக்கை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். மலாக்கா மாநிலக் குடிநுழைவுத் துறையினர் இரவு 10 மணிக்கு மேற்கொண்ட சோதனையில் அடையாள அட்டைகள், கடப்பிதழ்கள் இல்லாத 13 வெளிநாட்டினர்களையும் கைது செய்ததாக மலாக்கா மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Anirwan Fauzee Mohd Aini தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 13 வெளிநாட்டுப் பெண்களும் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதை ஒப்புக் கொண்ட நிலையில் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குற்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் Thailand, Laos , Myanmar ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

Pihak imigresen Melaka menahan 13 wanita asing berusia 20 hingga 45 tahun yang dipercayai terlibat dalam aktiviti pelacuran dan tinggal secara haram di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *