9 காப்பகங்களில் 136 ஜிஐஎஸ்பி குழந்தைகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச.17-

குளோபல் இக்வான் செர்வீசஸ் அண்ட் பிஸ்னஸ் (ஜிஐஎஸ்பி) ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட 136 குழந்தைகள் இன்னும் சமூகப் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான ஒன்பது காப்பகங்களில் தங்கி வருகின்றனர்.

அந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் இன்னும் உரிமை கோராமல் உள்ளனர் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷூக்ரி தெரிவித்தார். குளோபல் இக்வான் நிறுவனம் நடத்தி வந்த இல்லங்களிலிருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒரு சில மாதங்களுக்கு முன்பு மீட்கப்பட்டனர்.

இக்குழந்தைகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், அக்குழந்தைகளுள் பெரும்பாலோர் தத்தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆயினும், 136 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் அழைத்துச் செல்லாமல் உள்ளனர் என்று நான்சி குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *