147 போலீஸ்காரர்கள் பணியிலிருந்து நீக்கம்!

- Muthu Kumar
- 03 Jan, 2025
மலாக்கா, ஜன. 3-
கடந்தாண்டில் மட்டும் மொத்தம் 147 போலீஸ்காரர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்கத் துறை இயக்குநர் அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலோர் போதைப் பொருள் விவகாரங்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றங்களில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“அவர்களில் பெரும்பாலோர் மீதான முதல் சிறுநீர் சோதனையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது உறுதியானது. இரண்டாம் சிறுநீர் மாதிரி, மருத்துவமனை நோயியல் நிபுணருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னரும் அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
“விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் என்று கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்” என்று, மலாக்கா மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அஸ்ரி தெரிவித்தார். சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்கும் ஒரு பாதுகாப்புப் படையாக போலீஸ்படை விளங்குவதால், அதன் அதிகாரிகள் அல்லது உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அதில் தேசிய போலீஸ் படை சமரசம் காணாது என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *