14 கிலோ போதைப்பொருள் பறிமுதல்! – தம்பதியர் கைது

- Shan Siva
- 07 Jan, 2025
ஜொகூர் பாரு, ஜன 7: மொத்தம் 14 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை வைத்திருந்ததாகவும் விநியோகித்ததாகவும் தம்பதியினர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
32 வயது செங் ஈ
ஃபெய் மற்றும் 34 வயது சான் பெய் ஈன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஆண்டு
டிசம்பர் 28 ஆம் தேதி
நள்ளிரவு 12.30 மணியளவில் ஸ்குடாயில்
உள்ள ஜலான் பெர்சியாரான் முத்தியாரா மாஸ் வாகன
நிறுத்துமிடத்தில் கருப்பு நிற காரில் 14.42 கிலோ எம்டிஎம்ஏ போதை வஸ்துவை விநியோகித்ததாக அவர்கள் மீது
முதலில் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும்,
குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமிருந்தும் எந்த
மனுவும் பதிவு செய்யப்படவில்லை.
ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 (திருத்தப்பட்ட 1980) பிரிவு 3B(1)(2)ன் கீழ் இந்த குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது அதே சட்டத்தின் பிரிவு 39B(2) இன் கீழ் தண்டனைக்குரியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *