மாணவர்களுக்கான RM 150 உதவித் தொகை - திங்கள் முதல் வழங்கப்படும்!

- Shan Siva
- 10 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 10: 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை 13
ஆம் தேதி முதல் RM150 ஆரம்ப பள்ளி
உதவித்தொகை விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட வகுப்புகளில் உள்ள 2024/2025 பள்ளி அமர்வின் மாணவர்கள் திங்கள்கிழமை முதல்
உதவி பெறத் தொடங்குவார்கள் என்று ஓர் அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மடானி அரசாங்கத்தால் ஒரு மாணவருக்கு RM150 என்ற இந்த ஒரு முறை செலுத்துதலுக்காக மொத்தம் RM79, 12, 50,000 ஒதுக்கப்பட்டுள்ளது, இதனால் 52
லட்சத்துக்கும் அதிகமான
மாணவர்கள் பயனடைவார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *