மாணவர்களுக்கான RM 150 உதவித் தொகை - திங்கள் முதல் வழங்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 10: 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை 13 ஆம் தேதி முதல் RM150 ஆரம்ப பள்ளி உதவித்தொகை விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட  வகுப்புகளில் உள்ள 2024/2025 பள்ளி அமர்வின் மாணவர்கள் திங்கள்கிழமை முதல் உதவி பெறத் தொடங்குவார்கள் என்று ஓர் அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 2025/2026 அமர்விலிருந்து 1 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் இரண்டாம் செமஸ்டரில் உள்ள படிவம் 6 மாணவர்களுக்கான உதவித்தொகை பிப்ரவரி 16 அன்று வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய படிவம் 6 மாணவர்களுக்கு, உதவித்தொகை விநியோகம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடானி அரசாங்கத்தால் ஒரு மாணவருக்கு RM150 என்ற இந்த ஒரு முறை செலுத்துதலுக்காக மொத்தம் RM79, 12, 50,000 ஒதுக்கப்பட்டுள்ளது, இதனால் 52 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *