வெ.150 பள்ளித் தொடக்க உதவி நிதி ஆறாம் படிவ மாணவர்களுக்கும் வழங்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, டிச. 23-

2025/2026 பள்ளித் தவணை முதல், பள்ளித் தொடக்க உதவி நிதியான 150 வெள்ளி, ஆறாம் படிவ மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.இந்த நிதி மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆறாம் படிவ மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் தெரிவித்தார்.

“இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. வரலாற்றில் முதல் முறையாக ஆறாம் படிவ மாணவர்களுக்கு இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது. ஆறாம் படிவ மாணவர்களும் உற்சாகமடைவதைக் காண நாங்கள் விரும்புகிறோம்.

“எஸ்பிஎம் தேர்வுக்குப் பிந்திய படிப்பான ஆறாம் படிவம் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், இந்த உதவி நிதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஃபாட்லினா குறிப்பிட்டார்.

தற்போது ஆறாம் படிவத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதத்திலும் அதன் புதிய மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதத்திலும் இந்த 150 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட விருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த உதவி நிதியைப் பெறும் 52 லட்சம் மாணவர்களுக்காக மொத்தம் 80 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக, கடந்த அக்டோபர் 18ஆம் தேதி மக்களவையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *