அரச குடும்பத்தின் பெயர்களைப் பயன்படுத்தி 15,296 போலி கணக்குகள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  மே 9: பொதுமக்களின் புகார்கள் மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் கண்காணிப்பின் அடிப்படையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 26 பேரின் பெயர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மொத்தம் 15,296 போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்பட்ட பெயர்களில், சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா மற்றும் சிலாங்கூரின் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோரின் பெயர்களும் அடங்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

இந்தக் கணக்குகளில் 14,750 கணக்குகளை சமூக ஊடகத் தள வழங்குநர்கள் நீக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று சிலாங்கூர் ஆட்சியாளருடனான சந்திப்பில் இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்ததாகவும், இணையத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான இணையவழி அடையாள சரிபார்ப்பு அமைப்புகள் குறித்தும் ஆட்சியாளருக்குத் தெரிவித்ததாகவும் ஃபஹ்மி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *