குடிநுழைவுத்துறை முகாம்களில் 17,326 கைதிகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 6:

நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத்துறை முகாம்களில் கூட்டம் அதிகமாக இல்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 25 குடிநுழைவுத்துறை முகாம்கள் உள்ளன. அவற்றில் தற்காலிகமானவை உட்பட, செப்டம்பர் 30 வரை மொத்தம் 20,750 கைதிகள் தங்கலாம்.

தற்போது 17,326 கைதிகள் உள்ளனர். அவர்கள் மொத்த கொள்ளளவில் 82.5% ஆக உள்ளனர்" என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் எழுத்துப்பூர்வ பதிலில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களில் 12,231 ஆண்கள், 3,003 பெண்கள் மற்றும் 2,092 குழந்தைகள் உள்ளனர் என்று அவர் கூறினார்.கூட்ட நெரிசலைத் தடுக்க அரசாங்கம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை அறிய விரும்பிய PN லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் Suhaimi Abdullah கேள்விக்கு சைபுதீன் இவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *