புக்கிட் பிந்தாங்கில் 176 வெளிநாட்டினர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 23:தலைநகர், புக்கிட் பிந்தாங்கில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 176 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் காலாவதியான தேதியை விட அதிக நாள்கள் தங்கியதற்காகவும், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததற்காகவும் அவர்கள் விசாரிக்கப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் சௌபி வான் யூசோஃப், கூறினார்.

பிரபலமான சுற்றுலாத் தலத்தில் இந்த நடவடிக்கை இரவு 7.15 மணிக்குத் தொடங்கி, பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டதாக வான் சௌபி கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 71 வங்காளதேசத்தினர், மியான்மரைச் சேர்ந்த 60 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 16 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர், எகிப்து மற்றும் சூடானைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர் என வான் சௌபி கூறினார்.

ஆவணப்படுத்தல் செயல்முறை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *