ரெம்பாவ் விபத்தில் 19 நாள் மட்டுமே ஆன குழந்தை பலி!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், டிச 31:  சிரம்பான், ரெம்பாவ், கிலோமீட்டர் 3.8 ஜாலான் கம்போங் பத்து-இனாஸில் காலை 7.50 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் 19 நாள்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை இறந்தது. அக்குழந்தையின் ஒன்பது மாத சகோதரி கோமா நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பக்க பயணியாக இருந்த 19 நாள் ஆன முஹம்மது ஆரியன் காலிஷ் முஹம்மது அட்ஜ்ரில், மூளையில் ரத்தக்கசிவு காரணமாக துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஏழு மணி நேரம் கழித்து இறந்தார். அவரது சகோதரி புத்ரி எஷால் பின்னால் அமர்ந்திருந்தார்.  அவரும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கிறார் என்று ரெம்பாவ் மாவட்ட டிஎஸ்பி அஸ்மி அலி தெரிவித்தார்.

குழந்தையின் தாயார் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கம் திரும்பி விபத்துக்குள்ளானதாக அவர் கூறினார்.

தாயின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில்,  காயமடைந்த மற்ற குழந்தைகள் அனைவரும் சிகிச்சைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *