கரை ஒதுங்கிய படகில் 196 ரோஹிங்கியர்கள்!

- Shan Siva
- 03 Jan, 2025
லங்காவி, : ஆயர் ஹங்காட்டில் உள்ள பந்தாய் தெலுக் யூ என்ற இடத்தில்
இன்று அதிகாலை படகு கரை ஒதுங்கியதில், 196 ரோஹிங்கியா குடியேறிகளை போலீசார் கைது
செய்துள்ளனர்.
ரோஹிங்கியா படகு
ஒன்று வந்ததை அறிந்ததும் லங்காவி காவல்துறை தலைவர், உதவி ஆணையர் ஷரிமான் அஷாரி தலைமையிலான போலீஸ்
குழு அதிகாலை 3.25 மணிக்கு சம்பவ
இடத்திற்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில்
மூன்று கைக்குழந்தைகள் உட்பட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்
மற்றும் சிறுமிகள் அடங்கிய புலம்பெயர்ந்தோரின் குழுவை குழு கண்டறிந்ததாக ஓர்
ஆதாரம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *